கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிகள் துவக்கம்

நந்திவரம் - கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிகளை எம்.பி.செல்வம், எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர்.

Update: 2024-02-18 02:43 GMT
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்று தலைமை நீரேற்றும் நிலையத்தில்,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் காஞ்சி பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தனர். உடன் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் ,துணைத் தலைவர்,மறைமலைநகர் நகர மன்ற தலைவர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர், மறைமலைநகர் நகராட்சி ஆணையர்,நீர்வளத்துறை உயர் அதிகாரிகள்,திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News