லஞ்சம் கொடுக்க வந்தவரிடம் ஆணையாளர் அதிரடி
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தனக்கு லஞ்சம் கொடுக்க வந்த நபர் குறித்து, வீடியோ ஆதாரத்துடன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.;
Update: 2024-02-06 05:00 GMT
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தனக்கு லஞ்சம் கொடுக்க வந்த நபர் குறித்து, வீடியோ ஆதாரத்துடன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்க்கு நேற்று லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுப்பதற்காக தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். இதனை ஆணையாளர் கண்டித்ததால் இயக்குனர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆணையாளர் இது குறித்த வீடியோ ஆதாரத்துடன் நெல்லை மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.