கூர்நோக்கு இல்லத்தில் தகராறில் ஈடுபட்ட சிறுவர்களால் பரபரப்பு

திருச்சி கீழரண்சாலையில் அமைந்துள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கூர்நோக்கு இல்லத்தில் தகராறில் ஈடுபட்ட சிறுவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-12-27 09:23 GMT

திருச்சி கீழரண்சாலையில் அமைந்துள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கூர்நோக்கு இல்லத்தில் தகராறில் ஈடுபட்ட சிறுவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கீழரண்சாலையில் அமைந்துள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில், குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மதுரையிலிருந்து 3 சிறுவர்கள் இங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூவரும் தங்களை மீண்டும் மதுரைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளரிடம் கடந்த சில தினங்களாக வலியுறுத்தி வந்துள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவர்கள் மூவரும் டியூப்லைட்டை உடைத்து அதன் கண்ணாடியால் உடலில் கிழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மூவரையும் மீண்டும் மதுரை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கூர்நோக்கு இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News