கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா மறைவு - வந்தவாசியில் சிபிஎம் அஞ்சலி

Update: 2023-11-16 05:00 GMT

நினைவஞ்சலி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா மறைவிற்கு சிபிஎம் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் என். சங்கரய்யா அவர்களின் மறைவையொட்டி சிபிஎம் வந்தவாசி வட்டாரக்குழுசார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி,வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சங்கரய்யா உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு அவரின் புகழை பறைசாற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பினர். இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. செல்வன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து, மூத்த தோழர்கள் பெ.அரிதாஸ், ந.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Tags:    

Similar News