சேலத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-02 09:08 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்ட்லெனினிஸ்டு) துணை அமைப்பான ஏ.ஐ.சி.சி.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். 

 மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலைத்திட்ட ஒதுக்கீட்டை ஆண்டுக்கு,

ரூ.2½ லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News