2600 டன் உரங்கள் கையிருப்பு

2600 டன் உரங்கள் கையிருப்பில் உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-04 10:06 GMT

2600 டன் உரங்கள் கையிருப்பில் உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்கள் 2,600 டன் வரை கையிருப்பில் உள்ளதாக ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். சிவகங்கையில் உள்ள டான்பெட் உரக்கிடங்கில் உரங்கள் இருப்பு குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிபிரபா, டான்பெட் மண்டல மேலாளர் ஜீவா பங்கேற்றனர். இதுகுறித்து ஆட்சியர் தெரிவித்ததாவது, தொடக்கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 1,150, டி.ஏ.பி., 450, பொட்டாஷ் 300, காம்ப்ளக்ஸ் 700 டன் என 2,600 டன் உரங்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News