பள்ளி நுழைவாயில் பகுதியில் கேட் அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டம், கொடூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் நுழைவாயிலில் கேட் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-03 01:44 GMT
பள்ளி நுழைவாயில் பகுதியில் கேட் அமைக்க,சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டம்,பவுஞ்சூர் அருகே கொடூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது. பள்ளியில், 45 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவாயில் பகுதியில் கேட் இல்லாததால், பகல் நேரத்தில் நாய், மாடு போன்ற கால்நடைகள் பள்ளி வளாகத்தில் வலம் வருகின்றன. பள்ளி முடிந்து மாணவர்கள் சென்ற பின், இரவு நேரங்களில் சிலர் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, மது அருந்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகையால், பள்ளி நுழைவாயில் பகுதியில் கேட் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News