கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு
கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 03:54 GMT
சமுதாய வளைகாப்பு
கெங்கவல்லி: கெங்கவல்லி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், கர்ப்பிணி பெண் களுக்கு கூடமலை ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. விழாவில், கிழக்கு மாவட்ட துணை செய லாளர் சின்னதுரை, ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் மணிமாறன், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், கூடமலை ஊராட்சி மன்ற தலைவர் யசோதா துரைசாமி, ஊராட்சி செயலர் பாலமுருகன் முன்னிலை வைத்தனர். இதில், கெங்கவல்லி, தெடாவூர், கூடமலை, செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளுடன் வளைகாப்பு நடந்தது. மேலும், அவர்களுக்கு ஐந்து வகை சாப்பாடு வழங் கப்பட்டது. விழாவில் கெங்கவல்லி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேற்பார்வையாளர் மாதேஸ்வரி மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.