மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த மந்திரவாதி மீது புகார்

இரணியல் அருகே சொத்துக்களை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த மந்திரவாதி மீது புகார் கொடுத்த மூதாட்டி. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-02 06:57 GMT

 மந்திரவாதி மீது புகார்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள வில்லுக்குறியை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.-  எனது கணவர் கடந்த  20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனது மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். எனக்கு ஒரு மகன் உண்டு. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வருகிறார். எங்கள் பக்கத்து வீட்டில் 46 வயதுடைய நபர் ஒருவர் மாந்திரீகம் செய்யும் தொழில் செய்கிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் எப்போதும் என் மகனை மிரட்டி கிறுக்கன் என்று கூறி அடித்து விரட்டுவார். இதனால் மிரண்டு போன என் மகன் எப்போதாவது  தான் வீட்டுக்கு வருவான். அவர் எனது சொத்துக்களை கேட்டு மிரட்டி வருகிறார். நான் தட்டி கேட்டால்  கொலை மிரட்டல் விடுகிறார். இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் எங்கள் ஊர் சுடலைமாடசாமி கோவில் வழியாக எனது வயலுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த அந்த நபர் வேஷ்டி அவிழ்த்து நிர்வாணமாக நின்று கொண்டு என்னிடம் ஆபாசமாகவும் அருவருப்பாக நடந்து கொண்டார். நான் சத்தம் போடவே என்னையும் எனது மகனையும் கொல்வதாக  மிரட்டி சென்று சென்றுவிட்டார். என் மகனும் பயந்து வீட்டில் இருந்து எங்கு போனான் என இதுவரை தெரியவில்லை. எனவே அந்த மந்திரவாதி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார். இது குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News