மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பெட்டி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகளை மனுக்களாக பெட்டியில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-18 10:15 GMT

புகார் பெட்டி

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை வழக்கம்போல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேரடியாக பொதுமக்கள் மனு அளிக்கும் நிகழ்வு தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் ரத்து செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனுக்கள் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் பெட்டியில் செலுத்தி விட்டு செல்லலாம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை மனுக்களை பெட்டியில் செலுத்தினர் மாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரடி பார்வையில் மனுக்கள் பிரித்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News