'பெண்களுக்கான நீதி நாங்கள் தயார்' என்ற தலைப்பில் மாநாடு

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டி சார்பாக,பெண்களுக்கான நீதி நாங்கள் தயார் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

Update: 2024-03-01 02:16 GMT

மாநாடு

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டி சார்பாக, பெண்களுக்கான நீதி நாங்கள் தயார் என்ற தலைப்பில், பல்வேறு பகுதிகளில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டி சார்பாக,படாளம் கூட்டுச்சலையில்,செங்கல்பட்டு தெற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் வேல்விழி தலைமையில்,பெண்களைத் திரட்டி பெண்களுக்கான நீதி நாங்கள் தயார் என்ற மாநாடு நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு மத்தியில் ஆளும் பிஜேபி அரசை கண்டித்து இனிமேல் பெண்களுக்கு வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றால் காங்கிரஸ் தோழர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவோம் என சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், வட்டாரத் தலைவர் சத்தியசீலன்,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அசோக், விஜய், ஆரோன்,பூபால்,செந்தில்குமார்,ராஜேஷ் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் வேல் அழகி, ஜீவா, மனோஜா, பிரமிளா, உமா மகேஸ்வரி, செல்வி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News