காங்கிரஸ் கட்சியினர் ஆணையர் அலுவலகத்தில் மனு

காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி மாநகர போலீஸ் ஆணையரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

Update: 2024-02-27 04:33 GMT

மனு அளிக்க வந்தவர்கள் 

காங்கிரஸ் மீதும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி மாநகர போலீஸ் ஆணையரிடம் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் பி. கோவிந்தராஜ், ஆகியோர் தலைமையில் திருச்சி காங்கிராசார் புகார் மனு அளித்தனர். அதில் திருநாவுக்கரசர் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. புகார் மனு கொடுக்கும்போதுரு, கோட்டத்தலைவர்கள் எட்வின் ராஜ் , பிரியங்கா பட்டேல், மணிவேல் அண்ணாதுரை, கனகராஜ், மார்ட்டின், குமரேசன், பாலகிருஷ்ணன், தினகரன், கே எஸ் ரகுநாத், அர்ஜுன், எழிலரசன், பரணி , விஜயகுமார், மகேந்திரன் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News