மோடி வருவதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

திருநெல்வேலியில் மோடி வருவதை முன்னிட்டு கருப்புக்கொடி காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

Update: 2024-02-28 06:06 GMT

காங்கிரஸ் 

பாராளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு பாஜக சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை தனியார் பள்ளி மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று (பிப்.28) நடைபெறுகின்றது. இதில் பங்கேற்று உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நெல்லைக்கு வருகை தர உள்ளார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News