தேர்தல் பத்திர ஊழலைக் கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தேர்தல் பத்திரம் ஊழலை கண்டித்து தெற்கு மாவட்ட காங்., சார்பில் சாத்தான்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Update: 2024-02-17 08:29 GMT

மத்திய அரசின் தேர்தல் பத்திரம் ஊழலை கண்டித்து தெற்கு மாவட்ட காங்., சார்பில் சாத்தான்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக தேர்தல் பத்திரம் மூலம் ரூபாய் 7390 கோடி ஊழல் செய்ததாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து சாத்தான்குளத்தில் வட்டார, நகர காங்கிரஸ் அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News