கட்டட விபத்து: ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக நில உரிமையாளர்கள், மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-14 14:52 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டி பாப்சா லைன் பகுதியில் மேத்யூஸ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணியின் போது நேற்று மண் சரிவு ஏற்பட்டது. போலீஸார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜாகீர் காயமடைந்தார்.

ரிஸ்வான் பரிதாபமாக உயிரிழந்தார். மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் மேத்யூஸ், மேற்பார்வையாளர் நஸருல்லா ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஊட்டி மேரிஸ்ஹில் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் தாகிர் அகமது 39, என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. காண்டிராக்டரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News