கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி - எம் பி,எம் எல் ஏ பங்கேற்பு

செங்கல்பட்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினை எம் பி, எம் எல் ஏ துவக்கி வைத்தனர்.

Update: 2024-03-11 06:17 GMT
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14-ல் உள்ளடங்கிய வார்டு எண் 188 மடிப்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30,00,000 /- (30.லட்சம்) மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினை தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
Tags:    

Similar News