நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி

சேலம் மாவட்டம், ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2024-02-01 12:15 GMT
மேல்நிலை நீர்தேக்க தொட்டி 

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ராமநாயக்கன்பாளையம், ஊத்துமேடு ஆகிய கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தலா ரூ.27 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நில நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி தொடங்கியது. ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி தலைவர் அபிராமி மலைபெருமாள் தலைமை தாங்கினார்.

ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் செழியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் தமிழ், வார்டு உறுப்பினர் வல்லரசு, தி.மு. க. நிர்வாகிகள் செல்வம், ராஜி, செந்தில், பரத், செல்வி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுருக்கு

Tags:    

Similar News