போட்டி தேர்வு குறித்த கலந்தாய்வு கூட்டம்

கடலூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV போட்டி தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது.

Update: 2024-06-07 14:45 GMT

 கடலூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV போட்டி தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டி தேர்வினை கடலூர் மாவட்டத்தில் (09. 06. 2024) அன்று சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் இன்று (07. 06. 2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், உட்பட பலர் இருந்தனர்.  
Tags:    

Similar News