பிராணிகள் வகை தடுப்பு சங்கம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்!

ராணிப்பேட்டை ஆட்சியர் தலைமையில் பிராணிகள் வகை தடுப்பு சங்கம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2024-06-16 01:28 GMT
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பிராணிகள் வகை தடுப்பு சங்கம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய்த்துறை, கால்நடைத்துறை மற்றும் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிராணிகள் வகை தடுப்பு சங்கம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும், விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினர். இந்த கூட்டத்தில் கால்நடை இணை இயக்குனர் மருத்துவர் கோபி கிருஷ்ணன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News