நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் !

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது...

Update: 2024-04-01 07:30 GMT

ஆலோசனைக் கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்  வெற்றியூகம் குறித்து பல்வேறு கட்சிகள் நகரம் மற்றும் பேரூர்  ஊராட்சி ஒன்றியங்களில் செயலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு தனியார் திருமண மண்டபத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியின் எடப்பாடி நகர செயலாளர் கே.பி.எம்.சண்முகம் தலைமையிலும் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பாமக,பாஜக,தாமாக,அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி அடைய எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் திமுக ஆட்சியில் கூறப்பட்ட பொய் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News