காலாவதி தேன் விற்ற கடைக்காரர் இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவு!

காலாவதியான தேன் பாட்டில் விற்ற கடைக்காரர் 10,160 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.;

Update: 2024-05-08 06:58 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவைச் சார்ந்த சுப்பிரமணி என்பவர் திருநெல்வேலி பாளையங்கோட்டையிலுள்ள ஒரு கடையில் தேன் பாட்டில் வாங்கியுள்ளார். அதைப் பயன்படுத்துவதற்காக திறந்த போது அது காலாவதியானது எனத் தெரிந்துள்ளது. காலாவதியான தேதியிலிருந்து ஒரு மாதம் 12 நாட்கள் கடந்து கடைக்காரரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உடனே கடைக்காரரிடம் கொண்டு சென்று மாற்றுப் பொருள் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் மாற்றுப் பொருள் தர மறுத்ததுடன் மனுதாரரை உதாசினப்படுத்தியுள்ளார்.

Advertisement

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுப்பிரமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் தேன் பாட்டில் விலையான ரூ.160, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.5,000 மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.10,160 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News