பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு
பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-15 17:05 GMT
உறுதிமொழி ஏற்பு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்க்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது .
இதில் நுகர்வோர் தின உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வாசிக்க அதனை தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த உறுதிமொழி ஏற்க்கும் நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.