கலசபாக்கம் பகுதியில் தொடர் மணல் கடத்தல்!

கலசபாக்கம் செய்யாற்றில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-17 09:14 GMT

மணல் கடத்தல் 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் ஆரணி வருவாய் கோட்டாச்சியர் கலசபாக்கம், போளூர், ஆரணி ஆகிய தாசில்தார்களுக்கு மணல் கடத்துபவர்கள் யார், அவர்கள் மீது இதுவரை என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எத்தனை பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என சுற்றரிக்கை மூலம் கேள்வி எழுப்பி உள்ளார். மணல் திருட்டை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News