குமரியில் மழை நீடிப்பு - திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

Update: 2023-11-15 03:33 GMT

திற்பரப்பு அருவி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டத்தில் தினமும் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழு வதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. தற்போது கன மழை குறைந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யுள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கோதையாறு, குழித்துறையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந்துள்ளது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு மீண்டும் நேற்று அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News