ஸ்ரீவில்லிபுத்தூர்: மழையால் மேற்கூரை இடிந்து சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த தொடர் மழை காரணமாக மூதாட்டி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

Update: 2024-05-17 16:25 GMT

வீடு இடிந்து விழுந்து சேதம்

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முனியம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக மாலை நேரங்களில் பெய்யும் மழையானது இரவு வரை நீடிப்பதால் நகர் பகுதி முழுவதும் குளுமையாகவே இருந்து வந்தது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டில் அமைந்துள்ள கொளூர்பட்டி என்ற பகுதியில் முனியம்மாள் என்ற மூதாட்டி தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். ஒரு வாரமாக பெய்த தொகை காரணமாக அவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

அச்சமயத்தில் அவர் வீட்டின் முகப்பில் படுத்திருந்ததால் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மழையால் இடிந்து விழுந்த தனது வீட்டிற்கு நிவாரணத் தொகை வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரிடம் முனியம்மாள் மனு அளித்துள்ளார்.

Tags:    

Similar News