தொடர் மழையால் நிரம்பிய அணை

குமரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழை காரணமாக பேச்சிபாறை அணையில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.

Update: 2024-05-22 13:25 GMT

பேச்சி பாறை அணை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கிறது. மாவட்டத்தில் ஒரு வார காலமாக மழை நீடித்து வருகிறது இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

மேலும் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வெகுவாக நிரம்பி வருகிறது. இதனால் 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை அபாயகரமான அளவான 45அடியை தாண்டியதால் 500 கன அடி உபரி நீர் இன்று திறக்கபட்டது மேலும் மழை பெய்து வருவதாலும் கோதையாறு , பரளியாறு , தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஆகவே ஆறுகளின் கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கவும் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் அறிவுறுத்தி உள்ளார்

Tags:    

Similar News