கூட்டுறவு சங்க உதவியாளர் பணி எழுத்து தேர்வு

தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு வருகிற 7ஆம் தேதி நடைபெற உள்ளது. 

Update: 2024-01-05 05:26 GMT

எழுத்து தேர்வு 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காரபேட்டை நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடக்கிறது.  இந்த தேர்வுக்கான அனுமதி நுழைவுச் சீட்டை தூத்துக்குடி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.drbtut.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் வெ.முரளிகண்ணன் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News