பணம் தர மறுத்த கவுன்சிலருக்கு அடி உதை  - மருத்துவமனையில் அனுமதி

மயிலாடுதுறை அருகே எருமல் கிராமத்தில் பணம் கொடுக்க மறுத்த ஊராட்சி மன்ற உறுப்பினரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-05 03:11 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே உள்ள எருமல் மேல தெருவை சேர்ந்தவர் தனபால் மகன் ரஜினி, இவர் ஊராட்சி உறுப்பினராக இருக்கிறார்.அதே ஊரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பவுன்ராஜ் என்பவர் ரஜினியை வழிமறித்து  பணம் கேட்டுள்ளார், அதற்கு நான் தர முடியாது என்று கூறிய ரஜினியை எனக்கு பணம் கொடுக்க முடியவில்லை என்றால் நீ எல்லாம் எதுக்கு ஒரு கவுன்சிலர் என்று கேட்டு  திட்டியதால்  வாய் தகராறு முற்றி ரஜினியை அடித்து உதைத்துள்ளார். மயக்கம் அடைந்த ரஜினியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்  ரஜினியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பாகசாலை போலீசார் ரஜினிகாந்திடம் பெற்ற வாக்குமூர்த்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பவுன்ராஜை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News