பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் திரிந்த மாடுகள்

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2024-01-10 02:51 GMT

சாலையில் சுற்றி திரிந்த மாட்டுகள்

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஊராட்சிகள் 94 குக்கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தினசரி திருத்துறைப்பூண்டி நகருக்கு வந்து செல்கின்றனர் . இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றி திரிந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமப்பட்டனர் . இதை அடுத்து சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை நகராட்சியினர் பிடித்தனர் .இதனை தொடர்ந்து சாலையில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து நகராட்சியில் அடைத்தனர். மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்தார்.
Tags:    

Similar News