மேலூரில் 3வது நாளாக சிபிஎம் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

மேலூரில் மூன்றாவது நாளாக தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2024-04-05 15:52 GMT

மேலூரில் மூன்றாவது நாளாக தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

மேலூர் பகுதியில் மூன்றாவது நாளாக சு. வெங்கடேசன் பரப்புரை. A மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மூன்றாவது நாளாக மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் பரப்புரையை இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் துவக்கினார்.

அழகர்கோவில் கோட்டைவாசல் பகுதியில் இருந்து துவங்கிய இந்த பரப்புரை அழகர்கோவில், அ வல்லாளப்பட்டி, செட்டியார்பட்டி, புலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர் வாக்கு சேகரிக்கும்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News