செங்கிப்பட்டியில் நூறுநாள் வேலை கேட்டு சிபிஎம் மனு !

செங்கிப்பட்டியில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி எழுத்தரிடம், நூறு நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனித்தனியாக மனு கொடுக்கப்பட்டது.

Update: 2024-07-05 12:09 GMT

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம், செங்கிப்பட்டியில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி எழுத்தரிடம், நூறு நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனித்தனியாக மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், நிர்வாகிகள் அறிவழகன், மலர்கொடி,  கிளைச் செயலாளர்கள் வெங்கடாசலம், பன்னீர்செல்வம்,  பி.தங்கமணி ஏ.ஜி.தங்கவேல் மற்றும் திரளான நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News