திண்டிவனம் அருகே கிரேன் ஆபரேட்டர் கார் மோதி சாவு

திண்டிவனம் அருகே கிரேன் ஆபரேட்டர் கார் மோதி பலியானார்.

Update: 2024-06-18 10:26 GMT

பலியான வாலிபர்

விழுப்புரம் திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங் ஆனந்த் கன் மகன் ஆனந்த் (வயது 35). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கிரேன் ஆபரேட்டராக பணி புரிந்து வருகிறார். இவர் எண்டியூரில் இருந்து சென் னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட் டார்.

அதிகாலை 3.30 மணியளவில் திண்டிவனம் அடுத்த சாரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கார் ஆனந்த் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் அங்கிருந்த பள்ளத்திற்குள் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயி ரிழந்தார். காரில் பயணித்தவர்கள் காயம் இன்றி தப்பித்தனர்.

விபத்து பற்றி அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்த ஆனந் தின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News