குறிஞ்சிப்பாடி பகுதியில் விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-10 08:19 GMT

கனமழையால் சேதமடைந்த பயிர்கள்

குறிஞ்சிப்பாடி தாலுகா அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பெய்த கனமழையால் பல்வேறு விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக அரசு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News