கடலூர்: ஒரே நாளில் 890 மனுக்கள் குவிந்தது

கடலூரில் நடந்த பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரே நாளில் 890 மனுக்கள் குவிந்தன.

Update: 2024-02-20 15:13 GMT

கடலூரில் நடந்த பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரே நாளில் 890 மனுக்கள் குவிந்தன. 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 890 போ் ஆட்சியர் அருண் தம்புராஜிடம் மனுக்களை அளித்தனா். மனுக்கள் மீது ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News