வண்ண மின் விளக்குகளால் ஒளிரும் ஆட்சியர் அலுவலகம்
குடியரசு தினத்தை முன்னிட்டு வண்ண மின் விளக்குகளால் ஒளிரும் கடலூர் ஆட்சியர் அலுவலகம்.
Update: 2024-01-25 17:27 GMT
குடியரசு தினவிழா நாளை (26/01/2024) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூவர்ண வண்ண மின் விளக்குகளால் தற்போது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை கடலூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் செல் போனில் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.