கோழிவிளை டாஸ்மாக் கடை அருகே தொழிலாளிக்கு வெட்டு

கோழிவிளை டாஸ்மாக் கடை அருகே தொழிலாளியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-06 16:28 GMT
பொதுமக்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ஆர் சி தெருவை சேர்ந்தவர் சுனில் (41) கூலித்தொழிலாளி இவருக்கும் களியக்காவிளை கூட்டப்புளி பகுதியை சேர்ந்த ஸ்டான்லி (49) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 4-ம் தேதி இரவு கோழி விளை டாஸ்மாக் சுனிலை வழிவறித்த ஸ்டான்லி அறிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.

இதில் சுனிலுக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சுனில் அளித்த புகாரின் பேரில் கலியாக்காவிளை  போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

   இதே டாஸ்மாக் பாரில் கடந்த 31-ம் தேதி பிசியோதெரபிஸ்ட் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டாஸ்மாக் கடையில் அடிக்கடி இது போன்ற பிரச்சனை நடைபெறுவதால்  கடையை அகற்ற வேண்டும் என கிள்ளியூர் எம்எல்ஏ உட்பட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

   இந்த நிலையில் நேற்று அந்த பாரின் முன்பகுதியில் பொதுமக்கள் சார்பில் திடீரென போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுபான கடைக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News