அம்பையில் தினம்தோறும் கால்நடைகளின் அட்டூழியம்
அம்பையில் சாலையை மறிக்கும் கால்நடைகளை அப்புறபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 07:15 GMT
அம்பையில் தினம்தோறும் கால்நடைகளின் அட்டூழியம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்யாணி தியேட்டர் எதிர்புறம் உள்ள சாலையோரம் 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் தினந்தோறும் சாலையை மறித்து நிற்கின்றன. இதனால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை அப்புறபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.