விருகை பூங்கா குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

விருகை பூங்கா குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-27 16:50 GMT

செத்து மிதந்த மீன்கள்

விருகம்பாக்கம் பாஸ்கர் காலனி குளத்தில் தண்ணீர் வற்றி வருவதால், மீன்கள் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில், ஸ்பாஞ் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் நடுவே, குளம் ஒன்று உள் ளது. இதில் மீன்கள் மற்றும் வாத்துக்கள் உள்ளன.

சென்னையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பூங்கா குளத்தில் உள்ள தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. இதனால், இந்த குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதக்கின்றன. எனவே, குளத்தில் நீர் தேக்கி, மீன்கள் மற்றும் உயிரினங்களை காப்பாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News