பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

கழுகுமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-22 11:37 GMT

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையை அடுத்த கரடிகுளம், சின்ன காலனி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மகேஷ் மனைவி முருகலட்சுமி (34). இவருக்கும், கழுகுமலை அண்ணா புதுத் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் சுதீஷ்குமாா்(36) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாம்.  சுதீஷ்குமாருக்கு மதுப் பழக்கம் இருந்ததால் அவருடன் பேசுவதை முருகலட்சுமி நிறுத்திவிட்டாராம். இந்நிலையில், தனது வீட்டு முன் நின்றிருந்த முருகலட்சுமியை சுதீஷ்குமாா் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து சுதீஷ்குமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News