நெகிழி பயன்பாடு குறித்த பட்டிமன்றம்!

நெகிழி பயன்பாடு குறித்த பட்டிமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Update: 2024-03-26 05:05 GMT
நெகிழிப் பயன்பாடு பட்டிமன்றம் 
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட விநாயகபுரம் நடுநிலைப்பள்ளியில் நெகிழிப் பயன்பாடு குறித்த பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கும், தங்கள் இல்லங்களிலும் மட்கும், மட்காத குப்பைகளை வகைப்பிரிப்பு செய்யும் மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக பெரணமல்லூர் அன்பு மெடிக்கல்ஸ் உரிமையாளர் ராமஜெயம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
Tags:    

Similar News