கணவருக்கு கடன் தொல்லை - இளம்பெண் தற்கொலை

நாகர்கோவில் அருகே கணவருக்கு இருந்த கடன் தொல்லையால் மன வருத்தமடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சமபவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-15 02:25 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மனைவி முத்துலட்சுமி (35). கணவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்து லட்சுமி மனவருத்தத்தில் இருந்துள்ளார்.  கடந்த 12-ம் தேதி  நள்ளிரவில் வீட்டில் படுக்கை அறையில் விஷம் அருந்திய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு புத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்  சிகிச்சை அளித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம்  அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு நேற்று இரவு முத்துலட்சுமி இறந்தார். இது தொடர்பாக ராமசுப்பிரமணியன் வடசேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News