புதிய அணை கட்டித்தர கோரிக்கை

புதிய அணை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-05 06:43 GMT

வரதமாநதி 

பழநி அருகே ஆயக்குடி மலைப்பகுதியில் வரதாமநதி அணை உள்ளது. இந்த அணை 1972ம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த அணையின் நீர்ப்பாசனத்தில் 12 குளங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின் நீரைத்தான் ஆயக்குடி மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அணையின் மொத்த கொள்ளளவு 117 மில்லியன் கன அடி மட்டுமே. தற்போது ஆயக்குடி பகுதியின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. எனவே, விவசாயம் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, வரதமாநதி அணையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தற்போது ஆயக்குடி மக்களிடையே வலுத்து வருகிறது.
Tags:    

Similar News