விரிவாக்க பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க கோரிக்கை

மானாமதுரை நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-05 07:42 GMT

குடிநீர் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் 4500 குடிநீர் இணைப்புகள் மூலம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மானாமதுரை அருகே ராஜகம்பீரம் வைகை ஆற்று பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், மானாமதுரை நகராட்சி எல்லையை ஒட்டியுள்ள விரிவாக்க பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News