மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடம் அகற்றம்

சிவகங்கையில் செயல்பட்டு வந்த மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடம் இன்று அகற்றப்பட உள்ளது

Update: 2024-02-20 06:43 GMT

மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடம் அகற்றம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை காந்தி வீதியில் 30 ஆண்டாக இயங்கிய மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்ட பழைய கட்டடத்தை அகற்றும் பணி இன்று துவங்க உள்ளது. சிவகங்கை காந்தி வீதியில் 1993ல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான கட்டடம், கூட்ட அரங்கு, அலுவலர்கள் அறைகளுடன் கட்டப்பட்டு, செயல்பட தொடங்கியது. தொடர்ந்து 30 ஆண்டை கடந்த நிலையில், பழைய கட்டடம் சிதிலமடைய துவங்கியது. இந்த கட்டடத்தை அகற்றி, காஞ்சிரங்காலில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தேர்வு செய்தனர். விரைவில் புதிய வங்கி கட்டடம் கட்டும் பணி துவங்க உள்ளது. இந்நிலையில் சிதிலமடைந்த நிலையில் காந்தி வீதியில் உள்ள பழைய வங்கி கட்டடம் அகற்றும்பணி, இன்று முதல் துவக்கப்பட உள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News