ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் டி.என்.இ.பி, எம்பிளாய் பெடேரஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-12-27 13:10 GMT

 மேட்டூரில் டி.என்.இ.பி, எம்பிளாய் பெடேரஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சேலம் மாவட்டம்,மேட்டூரில் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் நுழைவாயில் முன்பு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உப தலைவர் வி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும், பகுதி நேர பணியாளர்கள் இல்லாத பிரிவு அலுவலகங்களுக்கு பணியாளர்களை நியமனம் செய்திடல், 4 சதவீதம் அகவிலைப்படி உயர் மின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News