அரியலூரில் ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-09 14:45 GMT
அரியலூரில் ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊழியர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலர் சந்தோஷ் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சேக்தாவூத் தலைமை வகித்தார். செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச் செயலர் பழனிவேல் தலைமை வகித்தார். இதே போல் திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம்,

ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர்.

Tags:    

Similar News