சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்ட எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-24 03:54 GMT

ஆர்ப்பாட்டம் 

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்ட எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும்,மத்திய மோடி அரசாங்கத்தை கண்டித்தும் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்தூர் மணிக்கூண்டு முன்பு நடைபெற்றது. இதில் நரசிங்கபுரம் சக்கரவர்த்தி, பொருளாளர் ஓசுமணி, ஆத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் எல்.முருகேசன், மூடுதுறை கனகராஜ், ஜே.பி.கிருஷ்ணா, தங்கராஜ், இளைஞர் காங்கிரஸ் ஜலகண்டாபுரம் அரவிந்த், ஆத்தூர் சதீஷ், வட்டார தலைவர்கள் ஆட்டையாம்பட்டி சாமி, ராஜாராம், ஏற்காடு ஜெய் ஆனந்த், அழகுவேல் ராமர், நேதாஜி செல்வகுமார், ஜெயபால், கண்ணன், கவுன்சிலர் சாந்தி ராஜேந்திரன், மகாலட்சுமி, இஸ்மாயில், சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News