சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-01 11:59 GMT

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கடந்த 19ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடைபெற்று வருகின்றது.  இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஒன்றியங்களில் இருந்து வருகை தந்த நூற்றிற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற்ற கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News