தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கம் சார்பில் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Update: 2024-02-23 04:47 GMT

ஆர்ப்பாட்டம்

செங்குன்றம் பகுதியில் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் அந்நிறுவனத்தில் ஊதிய உயா்வு கோரியதற்காக 50 தொழிலாளா்கள் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டனா். மேலும் தற்போது ஒப்பந்தத் தொழிலாளா்களை கொண்டு ஆலையை நிா்வாகம் இயக்கி வருகிாம். நிா்வாகத்தின் சட்ட விரோதப் போக்கை கண்டித்தும், தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை கோரியும் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் சம்பத் தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் காமராஜா் சிலை அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவா் கே.சேஷாத்திரி, நிா்வாகிகள் செல்வராஜ், நடராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்..
Tags:    

Similar News