சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில்,ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-02-28 02:39 GMT
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், மாநில செயற்குழு உறுப்பினர் தேவதாஸ் தலமையில்,சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக தேர்தலின் போது வாக்குறுதி அளித்த திமுக அரசு கூறியதை, நிறைவேற்ற வலியுருத்தியும், சென்னையில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாகராஜ், கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மாவட்ட பொருளாளர் பிரபு.
Tags:    

Similar News